tamilnadu

img

புத்தாண்டில் ரயில் கட்டணம் உயர்வு

புதுதில்லி:
2020 புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் மத்தியமோடி அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ரயில்கட்டணம் செவ்வாயன்று நள்ளிரவு முதல் உயர்த்தப் படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  சாதாரண ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு  1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.  ஏ.சி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனவசதி இல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

;