tamilnadu

மொபைல் டவர்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறதா?

புதுதில்லி, ஜூலை 10- மொபைல் டவர்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு வரை யறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ரங்கராஜன் நாட்டில் மொத்தம் உள்ள மொபைல் டவர்கள், மாநிலங்கள் வாரி யாக எத்தனை என்றும், அவை வெளி யேற்றும் கதிர்வீச்சின் அளவை வரை யறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக ஏதேனும் அறிக்கை வந்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாட்டில் உள்ள மொபைல் டவர்களின் எண்ணிக்கை, மாநில வாரியாகத் தனியே தரப்பட்டிருக்கிறது என்றும், 2019 மே 31 தேதியளவில், நாட்டிலுள்ள 334  அடிப்படை செலுத்துப்பெறுவி நிலை யங்களில் (Base Transreceiver Stations) வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிக மான அளவில் கதிர்வீச்சை வெளியிடுவ தாக அறிக்கைகள் வந்துள்ளன என்றும், இவ்வாறு வரம்பைமீறி கதிர்வீச்சை வெளியிட்ட நிலையங்கள் மீது டெலிகாம் துறையினர் அபரா தம் விதித்திருப்பதாகவும், மேலும் ஹரி யானா மாநிலத்தில் ஒரு நிலையம் மூடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருக் கிறார். மற்ற இடங்களில் வரையறைக்கு உட்பட்ட அளவிலேயே கதிர்வீச்சு இருப்பதாகவும் அமைச்சர் தெரி வித்தார். மேலும் அமைச்சர் அளித்துள்ள அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 5,54,259 மொபைல் டவர்கள் இருக் கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 42,977 இருக்கின்றன. (ந.நி.)