ஸ்ரீஹரிகோட்டா:
பூமி கண்காணிப்பு உள்ளிட்ட 10 செயற்கைக் கோள்களுடன் நவம்பர் 7 ஆம் தேதியன்று பி.எஸ்.எல்.வி.சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அதில் நம் நாட்டுக்கு சொந்தமான செயற்கைக்கோள்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு செலுத்தி வருகிறது. தற்போது சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் இஸ்ரோ தயாரித்து வருகிறது. அவற்றையும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நவம்பர் 7 ஆம் தேதி மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியாவின் இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான 9 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன.