tamilnadu

img

ஜம்மு-காஷ்மீரின் உரிமைகளை காப்போம்!

இடதுசாரிகள் முழக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைக்கும் விதத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாக உடைத்து அட்டூழிய அரசியலை அரங்கேற்றியுள்ள மோடி அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 7 புதனன்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) லிபரேசன், அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆவேசமிக்க போராட்டத்தை நடத்தின. தலைநகர் தில்லியில் நடைபெற்ற பேரணி - ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, ஆனி ராஜா, சிபிஐ(எம்எல்) லிபரேசன் தலைவர்கள் தீபங்கர் பட்டாச்சார்யா, கவிதா கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான அறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.