tamilnadu

img

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது என்று ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (ஆர் & ஆர்) மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.

"தற்போது அவர் சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) ஆதரவில் இருக்கிறார்," என்று மருத்துவமனையின்  ஒரு புல்லட்டின் கூறியது.

திரு. முகர்ஜி திங்களன்று மூளையில் ஏற்பட்ட பெரிய ரத்தக்கசிவு காரணமாக, உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சையை மேற்கொண்டார், பின்னர் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்து வருகிறார்.

செவ்வாயன்று, அவரது உடல்நிலை பகலில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை மற்றும் மாலைக்குள் மோசமடைந்தது.இந்நிலையில் திரு. முகர்ஜிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதென்பது  குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜியின் மகள் மற்றும் டெல்லி மஹிலா காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி (Sharmistha Mukherjee), முன்னாள் ஜனாதிபதியை கடவுள் ஆசீர்வதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ட்விட்டரில், தனது தந்தை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவை (Bharat Ratna) எவ்வாறு வென்றார் என்பதை நினைவு கூர்ந்தார், அதே நேரத்தில் இந்த ஆண்டு அவர் "மோசமாக நோய்வாய்ப்பட்துள்ளார்" எனவும் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.