tamilnadu

img

பாதுகாப்பு ஆலோசனை குழுவில் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாக்கூர்

பாதுகாப்பு நிலைக்குழுவில் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யாசிங் தாக்கூர் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
கடந்த 2008ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர்  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத சட்டம் உள்ளிட்டவைகளில் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்  பிரக்யா சிங் தாகூரை, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில்  மோடி அரசு நியமித்துள்ளது.  ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தக்குழுவில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரக்யா சிங் தாகூருக்கு பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் இடம் அளித்திருப்பது, நமது பாதுகாப்பு படையை இழிவுபடுத்துவது போன்றது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆலோசனைக்குழுவில்,  எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.   
பிரக்யாசிங் தாகூர் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.