புதுதில்லி, டிச. 23- வெள்ளிக்கிழமை மாலை உத்தரப்பிரதேச மாநி லத்தில், ‘தி இந்து’ பத்திரிகையின் நிருபர் உமர் ரஷீத் என்பவர் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டி ருக்கிறார். இது தொடர்பாக தி இந்து இணையப்பதிப்பில் உமர் ரஷீத், கூறியிருப்பதாவது:
“வெள்ளிக்கிழமையன்று மாலை 6.45 மணிய ளவில் உத்தரப்பிரதேச பாஜக அலுவலகத்திற்கு வெளியே ஒரு சிற்றுண்டி விடுதியில் அவசரகதியில் சாப்பிட்டுக்கொண்டே, ஒரு சில கட்டிடங்களுக்கு அப்பால் நடைபெறவிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்புக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். என்னுடன் என் நண்பரும் அந்த ஊரைச் சேர்ந்தவருமான ராபின் வர்மா மற்றும் இருவர் இருந்தார்கள். அவர்கள் இரு வருமே பத்திரிகையாளர்கள்தான். அந்த சமயத்தில், சீருடையணியாத நால்வர் எங்கள் பக்கத்தில் வந்து, தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே, எங்களைப்பற்றி கடுமையான, மூர்க்கத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விசாரித்தார்கள்.
அவர்கள் என்னிடம் சில விஷயங்கள் குறித்து கேட்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறி என்னை அழைத்தார்கள். அப்போது நான் ஒரு பத்திரிகை நிருபர் என்று கூறி என் அடையாள அட்டையையும் காண்பித்து, ‘என்ன விஷயம்’ என்று கேட்டேன். எனினும் அவர்கள் என்னையும், ராபின் வர்மாவையும் போலீஸ் ஜீப்புக்குள் ஏற்றினார்கள். பின் என்னிடமிருந்த மொபைல் போனை யும் பிடுங்கிக் கொண்டு, யாரையும் அழைக்கக் கூடாது அல்லது யாரிடமும் இது குறித்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவ்வாறு செய்தீர்களானால் அதற்காக வருத்தப்படுவீர்கள் என்றும் கூறினார்கள். என்னிடம் எதுவும் கூற அவர்கள் மறுத்துவிட்டார்கள், நாங்கள் ஏதேனும் கேட்டால் அப்போது மட்டும் ‘பதில் சொல்’ என்று கூறிவிட்டார்கள்.
பெல்ட் அடி கண்ணத்தில் அறை
பின்னர் அவர்கள் எங்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஹஜ்ரத்கஞ்ச் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றார்கள். அங்கே ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களிடம் பேச விரும்புவதாகக் கூறினார்கள். பின்னர் ‘சைபர் செல்’ போன்று காணப்பட்ட அறைக்கு எங்களைக் கொண்டு சென்றார்கள். அங்கே நாங்கள் உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்த போலீஸ்காரர்க ளில் சிலர் தங்களிடமிருந்த தோல் பெல்ட் மூலமாக ராபினை அடித்தார்கள், பல தடவை கண்ணத்தில் அறைந்தார்கள். பின்னர் நாங்களிருந்த அறையைப் பூட்டினார்கள். நான் அவர்களிடம், ‘எதற்காக எங்களை அழைத்து வந்தீர்கள்?’ என்று என் எதிர்ப்பினைக் காட்டியபோது, அவர்கள் ‘சத்தம் போடாது இருக்க வேண்டும்’ என என்னைக் கேட்டுக்கொண்டனர். மீறி சத்தம் போட்டால், கிரிமினல் சதி குற்றத்தில் ஈடுபட்ட தாகக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 120-பி பிரி வின்கீழ் வழக்குப் பதிவு செய்துவிடுவோம் எனவும் மிரட்டினார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதி ராகக் கிளர்ச்சி நடைபெற்ற சமயத்தில் போலீஸ் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்கு எங்களிடம் சாட்சியம் இருக்கிறது என்றும் கூறினார்கள்.
நான் ஒரு பத்திரிகையாளன் என்று கூறி என் அடை யாள அட்டையையும் அவர்களிடம் காட்டி மீண்டும் அவர் களுக்கு நான் யார் என்று விளக்கம் அளித்தேன். அவர்க ளின் ஒருவருக்கு நான் ஒரு பத்திரிகையாளன் என்று என்னை நன்றாகவே தெரியும். எனினும் அதனை அவர் கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை.
வாயை மூடு...
அதற்குப் பதிலாக அவர்கள் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார்கள். உன் பத்திரிகைத் தொழிலை உன்னுடனேயே வைத்துக்கொள் என்று இந்தியில் உள்ள கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். என்னை ஒரு காஷ்மீரிப் பின்னணியில் இருந்து வந்துள்ளவன் என்றே பார்த்தார்கள். என்னுடைய பத்திரிகை பற்றி அவர்களுக்குத் தெரிவித்த போதிலும், தொடர்ந்து என்னைக் கேள்விகள் கேட்டு குடைந்துகொண்டும் அச்சுறுத்திக்கொண்டும் இருந்தார்கள். “நீ ஒரு சந்தே கத்திற்குரிய நபர்” என்று கூறி, வாயை மூடிக்கொண்டி ருக்குமாறு மிரட்டினார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் போலீசார் ராபின் வர்மாவை மிக மோசமாக அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் எனக்கு எதிராகவும் அதேபோன்று குற்றச் சாட்டுக்களை ஏற்படுத்தினார்கள். பின்னர் மீண்டும் எங்களை ஒரு போலீஸ் ஜீப்பில் பின்பக்கம் ஏற்றிக் கொண்டு எதுவும் கூறாமல் சுல்தான்புரி புறக்காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். இங்கேயும், ஒரு சிறிய அறையில் அடைத்து எங்களைக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். சில “காஷ்மீரிகள்” எங்கே இருக்கிறார்கள் என்றும், “எங்கே அவர்களை ஒளித்து வைத்திருக்கிறீர்கள்,” என்றும் தொடர்ந்து எங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இவை குறித்து எனக்கு எதுவுமே தெரி யாததால் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் இல்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு சில நிமிடங்களுக்குப்பின் காவல்துறை அதி காரிகள் இருவர் அங்கே வந்தார்கள். என்னை எழுந்து நிற்கச் சொன்னார்கள். பின்னர் என்னை ஒரு காவலரின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, என்னை “ஒரு சந்தேக நபர்” என்கிற ரீதியில் புகைப்படம் எடுத்தார்கள். பின்னர் என்னை மிரட்டி, அழைத்துவந்த அதே போலீஸ் காரர், மீண்டும் என்னிடம் “காஷ்மீரிகள்” எங்கே இருக்கி றார்கள் என்று மீண்டும் கேட்டார். தான் விரும்பும் விதத்தில் பதில்கள் சொல்லவில்லையென்றால் என் தாடியை முழுவதுமாகப் பிய்த்துவிடுவேன் என்றும் கூறினார்.
மொபைல் இல்லாததால் பதிய முடியவில்லை
என்னிடம் மொபைல் போன் இல்லாததால் அவர் எனக்கு எதிராக உதிர்த்த வார்த்தைகளை எல்லாம் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. பின்னர் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அன்றிரவு 8.30 மணிவரையிலும் அந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். பின்னர் மீண்டும் நான் ஹஜ்ரத் கஞ்ச் காவல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே மீண்டும் கிளர்ச்சியின்போது பங்கு கொண்டிருந்த நபர்களைப்பற்றி, குறிப்பாக காஷ்மீரிகளைப் பற்றித் தெரியுமா என்று மீண்டும் கேட்டார்கள். நான் அவர்களிடம் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் கிளர்ச்சி நடவடிக்கையைப் பதிவு செய்துகொண்டிருந்ததாகக் கூறினேன்.
காவல் ஆய்வாளர் கிளர்ச்சியின்போது நடைபெற்ற வன்முறை குறித்து வருத்தம் அடைகிறீர்களா என்று கேட்டார். நான் ஆம் என்கிற விதத்தில் தலையாட்டிய போது, அவர் என்னை நம்ப மறுத்தார். பின்னர் அவர் என்னிடம், இடதுசாரி சித்தாந்தத்தின் “போலித்தனம்” குறித்தும், சீனா குறித்தும் அங்கு மக்கள் மீது ஏவப் பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டார். அந்த சமயத்தில் நான் இவ்வாறு கைது செய்யப் பட்டு, விசாரணை செய்யப்பட்டு வரும் விஷயம் முதலமைச்சர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டது. அதன்பின்னர் என்னைக் கண்டபடி திட்டி, மிரட்டிய அதே போலீஸ்காரர்கள் இப்போது என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள். ஏதோ ஒரு ‘குழப்பத்தில்’ என்னை இழுத்துவந்துவிட்டதாக விளக்கிட முயன்றார்கள். இவ்வளவும் அவர்கள் என்னைப் பார்த்த கணமே என் அடையாள அட்டையைக் காண்பித்தும்கூட நடந்தவைகளாகும். பின்னர் போலீசார் என்னை விட்டுவிட்டனர். (ந.நி.)