tamilnadu

img

புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி விருந்து

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வியாழக்கிழமையன்று, இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.தில்லி அசோகா ஹோட்டலில் இந்த விருந்து நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச் சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பரிந்துரை குறித்து, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் விவாதிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அது குறித்து,எம்.பி.க்களுடனும் வியாழனன்று ஆலோசனை நடத்துகிறார்.அதனைத் தொடர்ந்தே, அன்றிரவு தில்லி அசோகா ஹோட்டலில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்தளிக்கிறார்.