புதுதில்லி,டிச.11- தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு தேர்வுக் குழு வின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முன்மொழிந்துள் ளது. குடிமக்களின் அந்தரங்க உரிமைகளை சமரசம் செய்து கொள்ளும் விதத்தில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா இருப்ப தாக நாடாளுமன்ற இரு அவை களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங் கிரஸ் எம்.பி. சசிதரூர் வலியுறுத்தி னார். இதைத்தொடர்ந்து, இரு அவைகளின் கூட்டு தேர்வுக்குழு வின் ஆய்வுக்கு மசோதா அனுப் பப்படும் என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் பாக தேர்வுக்குழு மசோதா தொடர் பாக அறிக்கை அளிக்கும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்மொழிந்தார்.