tamilnadu

img

பெரியார் சிலை அவமதிப்பு... ராகுல் காந்தி கண்டனம்

சென்னை:
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலை உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை (ஜூலை 17) அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் பெரியார் சிலை மீது காவி நிற சாயம் ஊற்றியிருப்பதை பார்த்து பெரியார் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து வந்து பெரியார் சிலை மீது ஊற்றப்பட்ட காவி நிற சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இதற்கிடையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பெரியார் அமைப்பினரும், தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பெரியார் சிலை அவமதிப்பு செய்யப் பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

;