இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்
இந்த இளைஞர்களில் சிலர் தாஷ்கண்டிலிருக்கும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தப்பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோதே அவர்கள் மாஸ்கோவில் புதிதாக நிறுவப்பட்ட கீழைத்தேச பல்கலைக்கழகம் நீடித்திருந்தது வரை” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கிளை அங்கு செயல்பட்டது. ஒரு சமயம் பஞ்சாபைச் சேர்ந்த நமது நைனாசிங் அந்தக்கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கு இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திய முயற்சிகள்தாம் முதலில் சொல்லப்பட்டவை என்றாலும், 1925 டிசம்பருக்கு முன்பு கட்சியின் மத்தியக்கமிட்டி உருவாக்கப்படவில்லை.
அடக்குமுறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவர் தன் நாட்டை விட்டு- தன் நண்பர்களை விட்டு - வெளி நாட்டுக்குச் செல்லுதல் என்பதே ‘ஹிஜ்ரத்’ என்னும் சொல்லின் பொருள். இந்த இயக்கத்தின் விளைவாக சுமார் 18 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர். அதனால் மக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் மறுத்தது. ஆப்கானிஸ்தான் இந்தியாவைக் காட்டிலும் பின் தங்கிய நாடாக இருந்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சியை பல இளைய முகாஜிர்மார்களும், (ஹிஜ்ரத் இயக்கத்தில் சேர்ந்தவர்களும்) விரும்பவில்லை. தாங்கள் துருக்கிக்குச் சென்று யுத்தத்தில் துருக்கி பக்கம் சேரப்போவதாக அவர்கள் நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். கடைசியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
காப்பாற்றிய செம்படை
இந்த இளைஞர்கள் இந்துகுஷ் கணவாயைக் கடந்து திர்மீஸை (இப்போது இந்தப் பிரதேசம் தாஜிகிஸ்தானில் இருக்கிறது) அடைந்தனர். அங்கிருந்து அவர்கள் படகு மூலம் அமுதாரியைக் கடக்கும் பொழுது டாக்மென் இனத்தைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தாக்கினர். இவர்களுக்குப் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பணமும், ஆயுதங்களும் கிடைப்பது வழக்கம். இந்தத் தாக்குதல் நடக்கும்போது செம்படை அங்கு வந்து சேர்ந்ததனால் இந்த முஸ்லிம் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். முஸ்லிம்களான அவர்கள், முஸ்லிம்களான துருக்கியர்களால் தாக்கப்பட்டது அவர்களிடத்தில் பெரியதொரு பிரதிபலிப்பை உண்டாக்கியது. அதனால் அவர்கள் கீர்க்கில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக செம்படையுடன் ஆயுதமேந்திப் போராடினார்கள். பிறகு இந்த இளைஞர்களில் சிலர் தாஷ்கண்டிலிருக்கும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோதே அவர்கள் மாஸ்கோவில் புதிதாக நிறுவப்பட்ட கீழைத்தேச பல்கலைக்கழகம் நீடித்திருந்தது வரை” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கிளை அங்கு செயல்பட்டது. ஒரு சமயம் பஞ்சாபைச் சேர்ந்த நமது நைனாசிங் அந்தக் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.
இந்தியாவுக்குத் திரும்புதல்
‘ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி’ யில் ஒன்பது மாதங்கள் படித்த பின்னர் தங்களது சொந்த நாட்டுக்கு வருவதற்கும் அங்கு இயங்குவதற்கும் இந்திய தோழர்கள் விரும்பினர். அவர்களில் இருவர் ஈரான் நாட்டு வழியே இந்தியாவுக்குத் திரும்புவதில் வெற்றி பெற்றனர். மற்ற சிலரால் இந்தியாவுக்குத் திரும்பி வருவதற்கான சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், பாமீர் வழியே இந்தியாவுக்குத் திரும்புவதற்காக ஆலோசித்தனர். அதன் விளைவாக, பாமீர் வரை அவர்களைக் கொண்டு சேர்க்க பாதுகாப்புக்குழு ஒன்றைக் கம்யூனிஸ்ட் அகிலம் அனுப்பி வைத்தது. இந்தியாவுக்குட்பட்டிருந்த சித்ரால் எனும் இடம் வரை அத்தோழர்களுடன் பாதுகாப்புக் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்களை இந்தியப்போலீஸ் கைது செய்தது. பிறகு அவர்கள் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலம் வரை பெஷாவர் சிறையிலிருந்தனர்.
பெஷாவர் சதிவழக்கும் தண்டனையும்
1923ஆம் ஆண்டில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிலருக்கு ஓராண்டு சிறையென்றும், இருவருக்கு ஈராண்டுகள் கடுஞ்சிறையென்றும், ஒருவருக்குப் பத்தாண்டுகள் சிறையென்றும் தண்டனை விதிக்கப்பட்டது. பெஷாவர் சதிவழக்குத்தான் உண்மையில் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான முதலாவது சதிவழக்கு. எனினும், இந்தச் செய்தி அட்டோக்கு நதியின் இக்கரைக்கு வந்து சேரவில்லை. அக்காலத்தில் வடமேற்கு எல்லைப் பிரதேச நிலைமை அப்படி இருந்தது. பெஷாவர் வழக்குக் கைதிகளில்- பின்னர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் மீர்அப்துல் மஜீத், பிரோஸ்தீன் மன்சூர், கூஹார் ரஹான் கான் ஆகியோர் ஆவர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கு இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திய முயற்சிகள்தாம் முதலில் சொல்லப்பட்டவை என்றாலும், 1925 டிசம்பருக்கு முன்பு கட்சியின் மத்தியக்கமிட்டி உருவாக்கப்படவில்லை.
கான்பூர் சதிவழக்கு
1923மே மாதத்தில் கான்பூரில் சௌகத் உஸ்மானியும் ( இவர் மாஸ்கோவிலிருந்து ஈரான் வழியாகத் திரும்பி வந்திருந்தார்) கல்கத்தாவில் நானும் கைது செய்யப்பட்டோம். சில நாட்களுக்குப்பிறகு லாகூரில் குலாம் ஹுசேனும் கைது செய்யப்பட்டார். வங்காளச் சிறைச்சட்டம் 1818-ன் படி (1818வது ரெகுலேஷன் 111) எங்கள் மூவரையும் விசாரணையின்றி வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். 1923 -ஆம் ஆண்டு டிசம்பரில் நளினி குப்தாவையும் கைது செய்து விசாரணையில்லாமல் சிறையிலிட்டனர். அவர் எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. என்றாலும், அவர் தம்மை ஒரு தேசியப் புரட்சிவாதியென்று அறிவித்துக் கொண்டார். அதிதீவிர செயல்கள் மீது தாம் வைத்திருந்த பற்றின் காரணமாக, அவர் ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எங்களது செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்.
இந்தியன் பீனல்கோடு, 121 ஏ பிரிவின்படி இந்திய அரசாங்கத்திற்காக கான்பூர் மாவட்ட மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் 1924 மார்ச் மாதத்தில் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளாக- 1.எஸ்.ஏ.டாங்கே, 2. சௌகத் உஸ்மானி, 3. முசாபர் அகமது, 4.நளினிகுப்தா, 5.குலாம்ஹுசேன், 6.சிங்காரவேலர், 7.ராமச்சந்திரலால் சர்மா, 8. மனபேந்திர நாத்ராய் (எம்.என்.ராய்) ஆகியோர் இருந்தனர். ஆரம்பத்தில் நால்வர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். சிங்காரவேலர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு வரவில்லை. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். குலாம் ஹுசேன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ராமச்சந்திரலால் சர்மா பாண்டிச்சேரியில் இருந்ததனால், அவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்தார். அதனால், அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவர முடியவில்லை. எம்.என்.ராய் ஐரோப்பாவில் இருந்தார். அதனால், அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதென்ற பிரச்சனையே எழவில்லை.
... தொடரும்