tamilnadu

img

நாடாளுமன்றம் மார்ச் 11 வரை ஒத்திவைப்பு

புதுதில்லி,மார்ச் 6- தில்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம்  நடத்த வேண்டும்.  வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர்  அமித் ஷா ராஜினாமா  செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் வலியுறுத்தினர். வெள்ளியன்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  மார்ச் 6 வெள்ளியன்று மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ,தில்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். இதையடுத்து, மாநிலங்களவை மார்ச் 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். இனி ஹோலி பண்டிகை முடிந்து மார்ச் 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அப்போது, தில்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

;