நடைபயண வீராங்கனைகளுடன் நேர்காணல்:சி.ஸ்ரீராமுலு, சுவாமிநாதன், காளிதாஸ், ஞானவேல்
கால்
கொண்டோரே
சமையல் அறை கடந்த பாதங்கள்
பயங்களை உடைத்தெறிந்து
சரித்திரம் படைக்க இதோ
சாலைகளில் நடக்கின்றன...
பெண்களுக்கு எதிரான வன்முறை
போதையால் சீரழியும் தமிழகம்
எதிர்ப்பதே லட்சியம் என அலையாய்
அக்கினி வெய்யிலில் வருகின்றனர்.. .
அச்சத்துடன் ஆதிபராசக்திக்கும்
ஆசையாய் மேல்மலையனூரும்
அன்னை வேளாங்கண்ணிக்கும்
மாலைபோட்டு செல்லும் ஊர்வலமல்ல. .
அச்சம் உடைத்தெழு என முழங்கி
பெண்ணின் அடிமைத் தளை நொறுக்கும்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க
சாதனை படைக்கும் போர்ப்படை இது.
விழி கொண்டோரே
அணிவகுப்பை பாருங்கள்.
செவி கொண்டோரே
இம்முழக்கத்தை கேளுங்கள்.
கரம் கொண்டோரே
கரமிணைத்து உற்சாகப்படுத்துங்கள்.
கால் கொண்டோரே
அணிவகுப்பில் சேருங்கள்!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு