புதுதில்லி, மார்ச் 14- கொரோனா வைரஸ் தாக் கத்தை தேசியப் பேரிடராக மத் திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளி கையில் பத்ம விருதுகள் வழங் கும் விழா ஒத்திவைக்கப்பட்டது. பலதுறைகளில் அரும் சாதனை படைத்தவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதி யில்உள்ள ஜனாதிபதி மாளி கையில் ஏப்ரல் 3 அன்று நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இதற்கிடையில் உயிர்க் கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்தியா வில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் ஏப்ரல் 3 அன்று நடைபெறவிருந்த பத்ம விருது கள் வழங்கும் விழா ஒத்தி வைக் கப்பட்டிருப்பதாகவும் மறுதேதி குறித்த அறிவிப்பு பின்னர் தெரி விக்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளது.