இனிவரும் காலங்களில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஓடிபி கட்டாயம் என்று ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் ஓடிபி நடைமுறைப்படுத்தப்படுகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு ஓடிபி எனும் ஒரு முறை பாஸ்வேர்டு வரும். இந்த பாஸ்வேர்டை அழுத்தினால் தான் பணம் எடுக்க முடியும்
இந்த ஓடிபி முறை நாட்டின் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களிலும் வரும் செப்டம்பர் 18 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் இந்த ஓடிபி வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க செல்லும் போது தங்கள் செல்போனை எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல் வங்கியோடு செல்போன் எண்ணை இணைக்காதவர்கள் இணைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.