tamilnadu

img

பிற நாடுகளில் சித்த மருத்துவ இருக்கை அமைக்க முயற்சி உள்ளது

சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுதில்லி, நவ.23- பிற நாடுகளில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடு களில் சித்த மருத்துவ இருக்கை அமைப்பதற்கு முயற்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று மத்திய ஆயூஷ் அமைச்சர் பதிலளித் துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவையில் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்க டேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் மேற்கண்டவாறு பதில ளித்தார்.   பிற நாடுகளில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடு களில் சித்தா இருக்கை அமைப்பதற்கு அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டுள் ளதா? அல்லது முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? அப்படி ஏதேனும் இருந்தால் அது குறித்த விபரங்களையும் எந்த காலத்திற் குள் சித்தா இருக்கை அமைக்க அரசு விரும்புகிறது என்றும் கேள்வி சு.வெங்க டேசன் கேட்டிருந்தார். அதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சர் அளித்த பதிலின் சாரம் பின்வருமாறு.

ஐடிஇசி (ITEC) எனும் மத்திய தொழி நுட்ப மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் மத்திய ஆயுஷ் துறை சித்த மருத்துவத்தை மலேசியாவில் மேம்படுத்த, மலேசியாவில் “சுங்காய் பூலோ மருத்துவமனையில்” ஒரு சித்த மருத்துவரை நியமித்து, வர்ம சிகிச்சை அளிக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் மத்திய சித்த ஆராய்ச்சி கழகம் சிங்கப்பூர் தேசிய நல ஆய்வுக் கழகத்திலும், சிங்கப்பூர் சித்த மருத்து வர்கள் கூட்டமைப்பிலும், மலேசியா “மாக்சா” பல்கலைக்கழகத்திலும் தொடர்பு கொண்டு, “சித்தா இருக்கை” அமைக்க விவரங்கள் சேகரிக்க சொல்லி யுள்ளது.அங்கிருந்து விருப்ப கோரிக்கை வந்ததும் மத்திய சித்தா கவுன்சில் அதற்கான நடவடிக்கையில் இறங்கும். இலங்கையில் யாழ்ப்பாண பல்க லைக்கழக சித்தா பிரிவிற்கு நிதி உதவி அளிக்கிறது. 

மலேசிய அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பத்தப் படி, சித்த மருந்து களை அங்கு பதிவு செய்து விற்பனை செய்யவும்,மலேசிய மாணவர்கள் சித்த மருத்துவம் படிக்க முழு உதவி செய்கிறது. அதன் மூலம் வருடத்திற்கு 5 மாணவர்களை படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருந்து செய் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை சர்வதேச கண்காட்சிகள் / மாநாடுகள் / பட்டறைகள் / கருத்தரங்குகள் / சாலை  காட்சிகள் / வர்த்தக கண்காட்சிகள் முதலியவற்றில் பங்கேற்க, மக்களிடை யே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக ஆயுஷ் துறை முனைப்பெடுத்து வருகிறது. ஆ) கூடவே வெளி நாடுக ளில் சித்த மருந்துகளை ஆயுஷ் மருத்துவமுறைகளை பதியவும், வெளி நாட்டிலுள்ள மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களான யு.எஸ்.எஃப்.டி.ஏ /  ஈ.எம்.இ.ஏ / யுகே-எம்.எச்.ஆர்.ஏ / என். எச்.பி.டி (கனடா) / டிஜிஏ. போன்றவற்று டன் கலந்து சித்தா தயாரிப்புகள் பதிவு செய்திட முனைப்பு எடுப்பதற்கும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் நிறுவனங்கள் தயா ரிப்பாளர்களுக்கு உதவிகள் சலுகை கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மத்திய அரசின் ஆயுஷ் துறை உலகெங்கும் ஆயுஷ் இருக்கைகளை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. “சித்தா இருக்கை”கான விருப்ப கோரிக்கை, இன்னும் பிற நாடு களிடம் இருந்து இதுவரை வரவில்லை. மத்திய அரசு அதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.