tamilnadu

img

வாய்ப்பந்தல் மோடி சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்

புதுதில்லி, ஜூலை 01 - அடுத்த 5 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு  உணவு பொருள் அளிக்கப்படும் என்றும், 9 கோடி விவசாயி களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவி  செய்யப்பட்டுவிட்டது என்றும் பிரதமர்  நரேந்திர மோடி கூறியிருப்பது வெற்று வாய்ப்  பந்தல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, செவ்வாயன்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் குறிப்பிட்ட  முக்கிய அம்சங்கள் தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி வெளியிட் டுள்ள விமர்சனக் கருத்துக்கள் வருமாறு: மக்களின் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக  மோடி அரசாங்கம் அடுத்த 5 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி/கோதுமை  இலவசம் என அறிவித்துள்ளது.

கொரோனா  ஊரடங்கு தொடரும் நிலையில், பட்டினி சாவு களைத் தடுக்க வேண்டும் எனில் அடுத்த 6 மாதங் களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 10 கிலோ  எனும் குறைந்தபட்ச தேவையை ஒப்பிடும் பொழுது இது குறைவு. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு  மாதமும் 43 இலட்சம் டன் மானிய விலையில்  உணவு தானியங்கள் தரப்படுகின்றன. 5 கிலோ கூடு தலாக இலவசம் என ஏற்கெனவே மோடி  அரசாங்கம் அறிவித்தது. அப்படியனால் 43 இலட்  சம் என்பது இரு மடங்காக உயர்ந்து இருக்க  வேண்டும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் 26 இலட்சம் டன் மே மாதத்தில் 29 இலட்சம் டன் எனும் அளவுக்குதான் உணவு தானியங்கள்  தரப்பட்டுள்ளன. இதுவும் மோடியின் ஜும்லா  எனப்படும் வெற்று வாய்ச் சவடால்தானா?

விவசாயிகளை ஏமாற்றுவது
மேலும், ஊரடங்கு காலத்தில், ரூ18,000  கோடியை 9 கோடி விவசாயிகளுக்கு கொடுத்ததாக  பிரதமர் மோடி கூறுகிறார். 2019ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரு2000 வீதம் மூன்று தவணை களில் 14 கோடி விவசாயிகளுக்கு தருவேன் என  மோடி அறிவித்தார். தற்சமயம் அறிவிக்கப்பட்ட 18000 கோடி அதில் இரண்டாவது தவணை!  இப்பொழுது 9 கோடி விவசாயிகளுக்குதான் தரப்பட்டது எனில் மீதமுள்ள 5 கோடி விவசாயி களுக்கு இந்த நன்மை கிடைக்கவில்லையா?  இது மோடியின் ஜும்லா மட்டுமல்ல; விவ சாயிகளை ஏமாற்றும் செயலும் ஆகும். ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் 14 கோடி  பேர் வேலை இழந்துள்ளனர். 8 கோடி இடம்  பெயர் தொழிலாளர்கள் சாலைகளில் இரு மாதங் களாக சாலைகளில் தான் இருந்தனர். இப்படி துன்பத்தில் உள்ள வரு மானவரி  வட்டத்துக்கு வெளியே உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மாதம் ரூ7500 பண மாகத் தரப்பட வேண்டும். ஜன்தன் வங்கி கணக்கு  உள்ளவர்களுக்கு ரூ 500 ஒரே ஒரு முறை மட்டும்  சொற்ப தொகை தருவது மக்களின் துன்பங்களை கேலி செய்வது ஆகும்.
வாய்ச்சவடால்
அதுமட்டுமல்ல, ஊர் திரும்பிய புலம்பெயர்  தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 8 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி அரசாங்கம் கூறு கிறது. ஆண்டுக்கு 100 நாள் வீதம் 1 கோடி  பேருக்கு வேலை தர ரூ 2.46 இலட்சம் கோடி செலவு ஆகும். ஆனால் பட்ஜெட் மற்றும் புதிய அறி விப்பை கூட்டினால் ரூ 1.5 இலட்சம் கோடிக்கும் குறைவாகவே உள்ளது. மோடியின் இந்த அறிவிப்பும் ஜும்லா எனப்படும் இன்னொரு வாய்ப்பந்தல்தான்! இந்தப் பிரச்சனைகளுடன், உலகிலேயே  கோவிட் 19 தொற்றுக்கு மிக குறைவாக பரி சோதனை செய்யும் தேசங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. அப்படி இருந்தும் தொற்று எண்ணிக்கை யும் மரணமும் ஆபத்தான முறையில் அதிகரித்து  வருகின்றன. இப்பொழுதாவது பரிசோதனை வசதி களை அதிகரியுங்கள்; தொற்று உருவான அனை வருக்கும் சிகிச்சை மற்றும் சுகாதார வசதி களை உத்தரவாதம் செய்யுங்கள்; முன்கள பணி யாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை தாருங்கள்.  நாம் எழுப்பிய கேள்விகளுக்கு மோடி பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.