புதுதில்லி, ஜூலை 2 - அடுத்த 5 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு உணவுப் பொருள் அளிக்கப் படும் என்றும், 9 கோடி விவசாயி களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டு விட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வெற்று வாய்ப்பந்தல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள் ளார். பிரதமர் நரேந்திரமோடி, செவ்வா யன்று தொலைக்காட்சியில் நாட்டு மக்க ளுக்கு உரையாற்றினார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் தொடர் பாக சீத்தாராம் யெச்சூரி வெளியிட் டுள்ள விமர்சனக் கருத்துக்கள் வருமாறு: மக்களின் கடுமையான எதிர்ப்பு கள் காரணமாக மோடி அரசாங்கம் அடுத்த 5 மாதங்களுக்கு 80கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி/கோது மை இலவசம் என அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தொடரும் நிலை யில், பட்டினி சாவுகளைத் தடுக்க வேண்டும் எனில் அடுத்த 6 மாதங் களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு நப ருக்கு 10 கிலோ எனும் குறைந்தபட்சத் தேவையை ஒப்பிடும் பொழுது இது குறைவு. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 43 லட்சம் டன் மானிய விலையில் உணவு தானி யங்கள் தரப்படுகின்றன. 5 கிலோ கூடு தலாக இலவசம் என ஏற்கெனவே மோடி அரசாங்கம் அறிவித்தது. அப்படி யானால் 43 லட்சம் என்பது இரு மடங்காக உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் 26 லட்சம் டன் மே மாதத்தில் 29 லட்சம் டன் எனும் அளவுக்குதான் உணவு தானி யங்கள் தரப்பட்டுள்ளன. இதுவும் மோடியின் ஜும்லா எனப்ப டும் வெற்று வாய்ச் சவடால்தானா?
விவசாயிகளை ஏமாற்றுவது
மேலும், ஊரடங்கு காலத்தில், ரூ.18 ஆயிரம் கோடியை 9 கோடி விவசாயி களுக்கு கொடுத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். 2019ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ. 2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளில் 14 கோடி விவசாயி களுக்கு தருவேன் என மோடி அறி வித்தார். தற்சமயம் அறிவிக்கப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி அதில் இரண்டா வது தவணை! இப்பொழுது 9 கோடி விவசாயிகளுக்குதான் தரப்பட்டது எனில் மீதமுள்ள 5 கோடி விவசாயிக ளுக்கு இந்த நன்மை கிடைக்கவில் லையா? இது மோடியின் ஜும்லா மட்டு மல்ல; விவசாயிகளை ஏமாற்றும் செய லும் ஆகும். ஊரடங்கு காலத்தில் குறைந்த பட்சம் 14 கோடி பேர் வேலை இழந்து ள்ளனர். 8 கோடி இடம் பெயர் தொழி லாளர்கள் சாலைகளில் இரு மாதங் களாக சாலைகளில் தான் இருந்தனர். இப்படி துன்பத்தில் உள்ள வரு மானவரி வட்டத்துக்கு வெளியே உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 பண மாகத் தரப்பட வேண்டும். ஜன்தன் வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு ரூ. 500 ஒரே ஒரு முறை மட்டும் சொற்ப தொகை தருவது மக்களின் துன்பங்களை கேலி செய்வது ஆகும்.
வாய்ச்சவடால்
அதுமட்டுமல்ல, ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 8 கோடி பேரு க்கு வேலை தருவதாக மோடி அரசாங் கம் கூறுகிறது. ஆண்டுக்கு 100 நாள் வீதம் 1 கோடி பேருக்கு வேலை தர ரூ.2.46 லட்சம் கோடி செலவு ஆகும். ஆனால் பட்ஜெட் மற்றும் புதிய அறி விப்பை கூட்டினால் ரூ. 1.5 லட்சம் கோடிக்கும் குறைவாகவே உள்ளது. மோடியின் இந்த அறிவிப்பும் ஜும்லா எனப்படும் இன்னொரு வாய்ப்பந்தல்தான்! இந்தப் பிரச்சனைகளுடன், உலகி லேயே கோவிட் 19 தொற்றுக்கு மிகக் குறைவாக பரிசோதனை செய்யும் தேசங் களில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதனால், தொற்று எண்ணிக்கையும் மரணமும் ஆபத்தான முறையில் அதிக ரித்து வருகின்றன. இப்பொழுதாவது பரிசோதனை வசதிகளை அதிகரியுங் கள்; தொற்று உருவான அனைவருக் கும் சிகிச்சை மற்றும் சுகாதார வசதிகளை உத்தரவாதம் செய்யுங்கள்; முன்கள பணியாளர்களுக்கு பாது காப்பு கருவிகளை தாருங்கள். நாம் எழுப்பிய கேள்விகளுக்கு மோடி பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.