tamilnadu

img

மிசோரம் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மிசோரம் மாநிலத்தின் அய்சாவல் நகரின்  வடகிழக்கே 25 கி.மீ தொலைவில் நேற்று மாலை 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு வங்கதேசம் மியான்மர் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.  இந்நிலையில் அய்சவால் நகரின் லிமென் சாம்டிலேங் சாலையில் உள்ள குவாரி அமைந்திருந்த பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.