tamilnadu

img

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை..

மும்பை:
இந்தியா போன்ற நாடுகளில்,‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்சாத்தியமற்றது என்று பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியுள்ளது.

“இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரே ஒரு ஓட்டு மூலம் ஆட்சியையே நிர்ணயிக்க முடியும். ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும். அதேபோல ஒரு மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடியாது என் றெல்லாம் விதிகள் இருக்கின்றன. இந்த விஷயங்கள் குறித்தெல்லாம் ஆலோசிக்க வேண்டும். எனவே, இப்போதைக்கு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்’ சாத்தியம் இல்லாதது” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. கூறியுள்ளார்.

இதேபோல சிவசேனாவின் மக்களவைக்குழு தலைவர் விநாயக் ராவுத் அளித்துள்ள பேட்டியில், “மத்திய, மாநில தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால் அப்போதுதேசிய பிரச்சனைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப் படும். அது பிராந்திய கட்சிகளுக்கு பின்னடைவாக இருக்கும்”என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்தஜூன் 19-ஆம் தேதி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்துஅனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த கூட்டத்தில், சிவசேனா பிரதிநிதிகள்யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.