tamilnadu

img

மனிதர்கள் மட்டுமல்ல புலிகளும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது.... வாகனத்தை மறித்து அசாம் பாஜக தலைவர் அடாவடி

கவுகாத்தி:
இதுவரை மனிதர்களை மட்டுமே மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று பாஜக கூட்டம்கூறிவந்தது. மாட்டிறைச்சி உண்டார்கள் அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களை அடித்துக் கொல்லும் சம்பவங்களையும் அரங்கேற்றி வந்தது.

இந்நிலையில், அசாம் மாநில பாஜக தலைவர் சத்ய ரஞ்சன் போரா, மனிதர்கள் மட்டுமல்ல, இனிமேல் மிருகக் காட்சிசாலையிலுள்ள புலி போன்ற விலங்குகளும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்றுகூறியுள்ளார்.கவுகாத்தி மிருகக்காட்சி சாலை புலிகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றி வந்த வாகனங் களை, சத்ய ரஞ்சன் போரா ஒருகூட்டத்துடன் சென்று தடுத்துஅராஜகத்திலும் ஈடுபட்டுள் ளார். புலிகளுக்கு, மாட்டிறைச்சியை பரிமாறக் கூடாது; கவுகாத்தி மிருகக்காட்சி சாலையில் சாம்பார் இன மான்கள் அதிக அளவில் உள்ளன. அந்தஉபரி மான்களைத்தான் புலிகளுக்கு இறைச்சியாக வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.ஒரு கட்டத்தில், அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்து, மாட்டிறைச்சியை மிருகக் காட்சி சாலைக்குள் கொண்டுசென்றுள்ளனர்.

இந்நிலையில், மிருகக் காட்சி சாலையின் அதிகாரி தேஜஸ் மரிஸ்வாமி அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில்,“வனவிலங்குகளுக்கு மாமிசஉணவு கொடுக்கவே மத்தியஉயிரியல் பூங்கா ஆணையம்பரிந்துரைக்கிறது. மிருகக் காட்சி சாலையின் உள்ளேஇருக்கும் ஏனைய விலங்குகளின் இறைச்சியை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு சட்டப் படி கொடுக்க முடியாது. அத்துடன், ‘சாம்பார் மான்’ ஒருகாட்டு விலங்கு, என்பதால் அதனைக் கொல்லவும் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.