tamilnadu

img

சுதந்திரம் இல்லாத சுற்றுலா தேவையில்லை... காஷ்மீர் பயணத்தைப் புறக்கணித்த ஆஸி., ஐரோப்பிய பிரதிநிதிகள்

புதுதில்லி:
மத்திய அரசின் 2 நாள் காஷ்மீர்சுற்றுலாவை, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியனைச்சேர்ந்த பிரதிநிதிகள் தவிர்த்துள்ளனர்.முன்னேற்பாடுடன் கூடிய சுற்றுலாவை, தாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட் டது. இதன் பின்னர் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் அக்டோபரில் காஷ்மீரில்சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருவரைக்கூட காஷ்மீருக்குள் அனுமதிக்காமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளை மட்டும் அனுமதிப்பதா? என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. மற்றொருபுறத்தில், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளில் சிலரே காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, அக்டோபர் மாதத்தைப் போன்று தற்போதும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுற்றுலா செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்பதாக இருந்தனர்.இந்நிலையில் ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா மற்றும்சில வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சுற்றுலாவை தவிர்த்துள்ளனர். காஷ்மீர் மக்களை சுதந்திரமான முறையில், தாங்கள்விரும்பிய வகையில் சந்திப்பதற்கே ஆவலாக இருப்பதாகவும், திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுடன் கூடிய பயணத்தை விரும்பவில்லை என்றும் அவர் கள் கூறியுள்ளனர்.

;