tamilnadu

img

கண்காணிப்பு தேவையில்லை... டிராய் அறிவிப்புக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு

புதுதில்லி:
வாட்ஸ் அப் உள்ளிட்ட ஓடிடி செயலிகளை கண்கா ணிக்கத் தேவையில்லை என்று  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) டிராய் அறிவித்துள்ளது. இதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில்  பரவுவதால் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் வாட்ஸ் அப்,பேஸ்புக், மெசஞ்சர் உள்ளிட்ட ஓடிடி செயலிகளின்  செயல்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.வாட்ஸ் அப் தகவல்களை இடைமறித்து அறியும் வசதியை வழங்குமாறு அந்நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டிருந்தது. அதனைஏற்க மறுத்த வாட்ஸ் அப் நிறுவனம், ஒட்டுமொத்தமாக செய்திகளை அனுப்புவதற்கு  சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெசஞ்சர், ஆப்பிள் பேஸ் டைம், கூகுள் சர்ச், ஸ்கைப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை இடைமறித்து கண்காணிக்க தேவையில்லை என்று டிராய்தெரிவித்துள்ளது. தகவல் தொடர்பு செயலிகளை இடைமறித்து கண்காணிப்பதை கட்டாயமாக்கி னால், பாதுகாப்பு கட்டமை ப்பை பலவீனப்படுத்தலாம் அல்லது சட்டவிரோத செயல்களை அதிகரிக்க செய்யலாம் என்று கூறி டிராய்சமாளித்துள்ளது. டிராயின்இந்த முடிவுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

;