tamilnadu

img

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை.... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

புதுதில்லி:
வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணழு ழுத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆறு மாதங்களில்கடன் தவணையை முறையாகச் செலுத்தியவர்களுக் கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலையின்றி வருமானமின்றி அவதிப்பட்டனர். அரசுகளின் நிவாரணம் போதுமான அளவில் இல்லை.அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான ஆறு மாத கால கட்டத்திற்கு, வங்கிகளில் கடன் தவணைகள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது. ஆனால்ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆறுமாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வசூலித்தன. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வணிகத்தின் மீது மட்டும் அக்கறை செலுத்தாமல் மக்கள் நலனிலும் அக்கறை காட்டுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் வங்கிக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யும்திட்டம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில்மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இச்செயலை மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டித்தனர். இந்த நிலையில், இந்தவழக்கில் உச்சநீதிமன்றத் தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்குவட்டியில்லை என்று தெரிவித்துள்ளது. 

அதில், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகன கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றது, சிறு குறு தொழில் கடன்ஆகியவற்றுக்கு வட்டிக்கு வட்டி வசூல்இல்லை. குறிப்பிட்ட இந்த ஆறு மாதங்களில் கடன் தவணையை முறையாகச் செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.வட்டிக்கு வட்டி விவகாரத்தில் முன் னாள் தலைமைத் தணிக்கையாளர் ராஜீவ்மெஹரிஷி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்தப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.அனைத்து வகை கடன் வாங்குபவர் களுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய் வது பல வங்கிகளுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நிதிச்சுமையைத் தாங்குவது என்பது சாத்தியமில்லை. எனவே இந்த 6 மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதற்கான நிவாரணம், மிகவும் பாதிக்கப்படக்கூடிய கடனாளிகளுக்கு மட்டுமே என்றும் இது 2 கோடி ரூபாய்வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமேபொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 5 அன்று நடைபெறுகிறது.