tamilnadu

img

நிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தா மறு சீராய்வு மனுதாக்கல்

புதுதில்லி:
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார், மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்துள்ளார்.தில்லியில் ஓடும் பேருந்தில்மருத்துவ மாணவி நிர்பயாஎன்பவரை 6 பேர் கொண்டகும்பல் பாலியல் வன்கொலை செய்தது. இந்த வழக்கில்தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போடும்படி தில்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நிராகரித்தது.இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமார் உச்சநீதிமன்றத்தில் வெள்ளியன்று மறு சீராய்வுமனுவை தாக்கல் செய்துள்ளார். 

;