tamilnadu

img

புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ் 40% கமிஷனுக்கு கறுப்புப் பணத்தை மாற்றித் தந்த மோடி- அமித்ஷா?

புதுதில்லி, ஏப்.11-பணமதிப்பு நீக்கத்தின் போது, 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொண்டு, பாஜகவினரே கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக வீடியோ ஆதாரம்ஒன்றை ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது.“பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தர, தனக்கு 40 சதவிகிதம் கமிஷன் வேண்டும்; ஏனென்றால் அந்த கமிஷனை மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும்” என்று பாஜக நிர்வாகி ஒருவர்பேசியதும், அதன்படியே, சம்பந்தப்பட்ட நபரை, குஜராத் பாஜக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாஜக நிர்வாகி,பின்னர் பெரிய சூட்கேஸூடன் வெளியேவருவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.“குறைந்தபட்சம் ரூ. 10 லட்சத்தில் துவங்கி எத்தனை கோடி ரூபாயை வேண்டுமானாலும் தங்களால் மாற்றித்தர முடியும்; அதற்கான வழிகள் எங்களிடம் இருக்கின்றன; மோடியிருக்கும் போது எதற்குப்பயப்பட வேண்டும்” என்றும் அந்த பாஜக நிர்வாகி வீடியோவில் கூறியிருந்தார். இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது பிரதமர் அலுவலகம் மற்றும் அமித் ஷா நடத்திய மிகப்பெரிய நிதிமோசடி என்பதற்கான புதிய வீடியோ கிளிப்பிங்சையும் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில்சிபல் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது பணப்பரிமாற்றம் செய்யும் செயல் பாடுகளில் பிரதமர் அலுவலகமும், பாஜகதேசியத் தலைவர் அமித் ஷாவும் தலையிட்டதாக, ’ரா’ (சுஹறு) உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.அதாவது, பண மதிப்பு நீக்கத்தின் போது ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை வெளிநாட்டில் அச்சடித்து, தில்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தின் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவந்து, அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றினார்கள்; பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த நிபுண் சரண்என்பவர்தான், இந்த ஆபரேஷனை ஒருங்கிணைத்தார். இதற்காக 26 பேரின் மேற்பார் வையில் பணப் பரிமாற்றக் குழுவையும் அமைத்திருந்தார்கள் என்பன போன்ற அதிர்ச்சியான தகவல்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. பாஜக தலைவர்அமித் ஷாவின் பெயர் இந்த வீடியோவில் இரண்டு இடங்களில் வருகிறது.மற்றொரு வீடியோ கிளிப்பில், மும்பையில் போர்ட் பகுதியில் உள்ள இந்துஸ்இண்ட் வங்கியின் மேலாளர் சஞ்சய் ஷானே100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தின் குடோனில் இந்த ரகசியப் பரிவர்த்தனை நடந்துள்ள நிலையில், ரூ. 320 கோடி வரையில்புதிய ரூபாய் தாள்களை மாற்ற வேண்டியிருப்பதாக அந்த வீடியோ கிளிப்பில் சஞ்சய் ஷானே கூறுவதும் பதிவாகியுள்ளது.புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட கபில் சிபல், இந்த நிதிமோசடி தொடர்பான வீடியோ பல மணிநேரங்கள் ஓடக்கூடியது; ஆனால், சிறு பகுதியே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது என்றுகூறியுள்ளார்.“பண மதிப்பு நீக்கம் நடைபெற்ற நேரத்தில், அமித் ஷா தலைமையில் சிறப்புஅணி ஒன்று அமைத்து பழைய ரூபாய் தாள்களுக்குப் பதிலாக புதிய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுத்துள்ளனர்; கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்தமுறைகேடுகளில், பிரதமர் அலுவலகத்துக்கும், பாஜக தேசியத் தலைவர்அமித் ஷாவுக்கும் நேரடி தொடர்பிருக்கிறது; இதற்கு 15 முதல் 40 சதவிகிதம் அளவிற்கு கமிஷன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

;