tamilnadu

img

நெட்பிளிக்ஸ், அமேசான் ஓடிடி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த தனிஅமைப்பு அமைக்கக்கோரி வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
ஓடிடி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த தனிஅமைப்பு அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த உச்சநீதுமன்றம், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு மட்டும் தான் பைரசி பிரச்சனை இருந்து வந்தது. திரையரங்கில் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் படத்தின் பைரசி தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் உடனடியாக வெளியாகின. ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாகும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பைரசி வராமல் பார்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த கோலிவுட், பாலிவுட் உட்பட அனைத்து படங்களும் உடனடியாக பைரசியில் வெளிவந்தன. இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்களாலும் பைரசியை கட்டுப்படுத்த முடியாமல்போனது  திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடி நிறுவனங்களுக்கு ‘அவுட்ரேட்’ஆக படங்களை விற்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பங்கு அடிப்படையில் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படு கிறார்கள் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த தனிஅமைப்பு அமைக்கக்கோரி  மூத்த வழக்கறிஞர் எஸ்.சேகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி எனப்படும் இணையதள திரைப்பட நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். இதனால் பட தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.