tamilnadu

நாங்குநேரி இரட்டை கொலை : 12 பேர் மீது  வழக்கு பதிவு

திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக  12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி ஸ்ரீலிசா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, குற்ற சம்பவம் நடந்த இடத்தில்இருந்து வெடிக்காத நாட்டுவெடிகுண்டுகள்,இருசக்கர வாகனம், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களின் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாக உள்ளதாக நெல்லைமாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.