tamilnadu

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்த முகேஷ் அம்பானி பாஜக, சிவசேனா அதிர்ச்சி

மும்பை, ஏப். 20 -காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த்தியோரா (42). தற்போது நடை பெற இருக்கும் தேர்தலில், மும்பை தெற்குத் தொகுதியில் போட்டி யிடுகிறார். 2004, 2009 தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றிருந்தாலும், கடந்த2014 மக்களவைத் தேர்தலில் சிவசேனாவிடம் தோற்றுப் போனார். எனினும், 4-ஆவது முறையாக மும்பை தெற்குத் தொகுதி யில் தியோரா போட்டியிடுகிறார்.இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு, இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ஆதரவு தெரி வித்திருக்கிறார். தியோராவுக்கு ஆதரவாக வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். “தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பை யின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக மிலிந்த் தியோரா மும்பை தெற்குத் தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் தெற்கு மும்பையில் உள்ள பொரு ளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆழமாகஅறிந்தவர். அவரது தலைமையில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங் கள் வளம் பெறும்” என்று முகேஷ்அம்பானி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான உதய் கோடக்கும் காங்கிரஸ் வேட்பாளர் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது, பாஜக, சிவசேனை கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

;