tamilnadu

img

மனிதம் கொல்லும் மசோதாக்கள்

ஊதிய விதிகள் மசோதா 2019 தொழிலாளர் சட்டம் தொழிலாளிக்கா? முதலாளிக்கா?

♦ ஊதிய விதிகள் மசோதா 2019- இந்திய தேசத்தின் உழைக்கும் மக்களுக்கு எதிரான சவாலாக அமைந்திருக்கி றது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குபவர்கள் உழைக்கும் மக்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட மதிப்பின்மீது அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களால் மிகவும் வஞ்சமாகவும் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கும் விதத்திலும் இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

♦இந்தச் சட்டமுன்வடிவினை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். 2018இன் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தின் முன்பு இதே போன்றதொரு சட்டமுன்வடிவின்மீது தொழி லாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஒரு மனதாக அளித்திட்ட பரிந்துரைகளை இந்தச் சட்டமுன் வடிவு முற்றிலுமாக உதாசீனம் செய்து புறக்கணித்துள்ளது.

♦ஊதியங்கள் மற்றும் போனஸ் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில், தொழிலாளர்க ளின் நலன்களுக்கு இம்மசோதா துரோகம் இழைத்திருக்கி றது. தொழிலாளர்களின் உரிமைகளை மிதித்துத்தள்ளி யிருக்கிறது. அதேசமயத்தில் ‘தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துகிறோம்’ (‘ease of doing business’) என்ற பெயரில் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களில் கவனம் செலுத்தி இருக்கிறது. 

♦இந்தச் சட்டமுன்வடிவானது, இந்தியத் தொழிலாளர் மாநாடுகள் 15, 44, 45 மற்றும் 2015இல் கடைசியாக நடைபெற்ற 46ஆவது மாநாடு ஆகியவை ஒருமனதாக அளித்திட்ட பரிந்துரைகளை மிகவும் ஜனநாயக விரோத மான முறையில் புறக்கணித்திருக்கிறது. 

♦1992இல் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்களின் அத்தியாவசியமான வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதற்கான துல்லியமான விதிமுறைகளையும் (concrete formula) புறக்கணித்திருக்கிறது. இவ்வளவு ஏன், உங்கள் அரசாங்கமே கூட பரிந்துரை செய்த அம்சங்களையும் கூடஇந்தச் சட்டமுன்வடிவு புறக்கணிக்கிறது.

♦ கார்ப்பரேட்டுகள்/பெரும் வர்த்தகப்புள்ளிகளின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு  அதிகார வர்க்கத்தினர் தங்கள் இஷ்டம்போல் தான்தோன்றித்தனமாக நிர்ணயிக்கும் ஒரு தொகையை ‘குறைந்தபட்ச ஊதியம்’ என்று கூறுவதற்கு இது வகைசெய்கிறது.

♦ கார்ப்பரேட்டுகளுடன், கார்ப்பரேட்டுகளுக்காக, தொழிலாளர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய” மசோதா இது. 
♦ மத்தியத் தொழிலாளர் அமைச்சர் 2019 ஜூலை 10ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது,  குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 160 ரூபாயாக இருந்திடும் என்று கூறியிருக்கிறார். கடைசியில்பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.இவர் கூறியிருக்கும் தொகை நாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் ஊதியங்களை விட குறை வானதாகும். தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபம் அதன்நச்சுப்பற்களுடன் வெளியே தெரியத் தொடங்கிவிட்டது.

♦ தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்டமுன்வடிவில் ‘ஊழியர்கள்’ மற்றும் ‘தொழிலாளர்கள்’ குறித்த வரையறைகளி லிருந்த தெளிவின்மையைச் சரிசெய்து துல்லிய மாகப் பரிந்துரைகளை அளித்திருந்தது. அதைக்கூட மசோதாவில் சேர்க்கவில்லை. இந்தத் தெளிவின்மையை நிறுவன முதலாளிகள் தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவதற்காகவும், குறிப்பாக விற்பனை மேம்பாடு ஊழியர்கள் சட்டம் (Sales Promotion Employees Act), உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் (Working Journalist Act) மற்றும் சில சட்டங்களில் வரக்கூடியவர்களைத் துன்புறுத்துவதற்காகவும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

♦ தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்கிற கொடூரமான எண்ணத்துடன், இம்மசோதா வந்திருக்கிறது. தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தால், அவர்களது எட்டுநாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்துகொள்வதற்கு முதலாளிகளுக்கு அதிகாரம் அளித்திருக்கிறது.  

♦ஒரு வேலை நிறுத்தம் சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா என்று யார் தீர்மானிப்பது? எந்த முதலாளி, தங்கள் நிறுவனத்தில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை சட்டப்பூர்வமானது என்று ஒப்புக்கொள்வார்? வேலை நிறுத்தம் செய்வது தொழிலாளரின் உரிமை. அவருக்கு வேலை செய்யவும் உரிமை உண்டு, வேலைநிறுத்தம் செய்யவும் உரிமை உண்டு.

♦ தொழிலாளர் நல ஆய்வாளர் எந்த பதவியை தொழி லாளர் ஆய்வாளர்/துணைதந்து ஊக்குவிப்பவர் (Inspector-cum-Facilitator) என்று மாற்றியிருக்கிறது. அவர்கள் யாருக்குத் துணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும்?  மேலிடத்திலிருந்து முன் அனுமதி பெற்றுத் தான் ஒரு நிறுவனத்தை ஆய்வு செய்திட ஆய்வாளர் செல்ல வேண்டுமாம். இது ஆய்வு என்பதன் நோக்கத்தையே முழுமையாக அடித்து வீழ்த்தி விடுகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைத்) திருத்தச் சட்ட(யுஏபிஏ) மசோதா 2019  குடிமக்கள் எல்லோரும் பயங்கரவாதிகளா?

♦ சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைத்) திருத்தச் சட்ட(யுஏபிஏ) மசோதா 2019- எனும் இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நாங்கள் எதிர்க்கி றோம். பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெய ரால் இந்த அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

♦இது நிறைவேறும்போது, உள்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள எந்த வொரு நபரையும், அவர் எந்த மாநிலத்தில் இருந்தாலும், பயங்கர வாதி என்று அறிவித்திட முடியும். சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தி ற்கு மத்திய அரசு தகவல் சொல்லக் கூடத் தேவை இல்லை. இதுதான் உங்களது ‘கார்ப்பரேட்கூட்டாட்சி’த் தத்துவத்தின் புதிய மாடலாகும். பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்திட முடியும். இந்த அர சாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் எந்த நபரையும் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக தன்விருப்பப்படி பயங்கரவாதி என அறிவிக்க முடியும். 

♦நாட்டின் நீதிபரிபாலன முறையின் அடிப்படைத் தத்துவமே தலைகீழாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்,தன்னைத்தானே நிரபராதி என்று நிரூபிக்கவேண்டுமேயொழிய, குற்றத்தைச் சுமத்திய அரசுத்தரப்பு, தன் தரப்பில் சாட்சியங்களையோ, சான்று ஆவணங்களையோ தாக்கல் செய்து அவர் பயங்கரவாதிதான் என நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை நிரூபிக்காமலே சிறையில் அடைக்க முடியும்.

♦ இப்போதுள்ள நடைமுறை, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டு சந்தேக மற நிரூபிக்கப்படும்வரை குற்றமற்ற வராகக் கருதப்பட வேண்டும் என்பதா கும். ஆனால் இப்போது கொண்டுவரப் பட்டிருக்கிற சட்டம் அதை மாற்றி இருக்கிறது. அதாவது அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை அவரைக் குற்றம் செய்தவராகக் கருதப்பட வேண்டும் என்று கூறுகிறது. 

எங்கும் செல்ல... எதுவும் செய்ய உரிமம்
♦ நமக்கு, ‘பொடா’, ‘தடா’ போன்ற கசப்பான அனுபவங்கள் உண்டு. 1994இல் ஏழாயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் ‘தடா’-வின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்கள். 1990இல் குஜராத்தில் மட்டும் ‘தடா’-வின் கீழ் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் அதிகமானவர்கள் சிறுபான்மை சமூகத்தவர் ஆவர்.

♦ இந்தச் சட்டம் தேசியப் புலனாய்வு ஏஜன்சிக்கு எந்த மாநிலத்திற்கும் சென்று, அவர்கள் விருப்பு வெறுப்புக் கேற்ப எதுவேண்டுமானாலும் செய்திட வெளிப்படையாக உரிமம்  அளிக்கிறது.

♦ இந்தச் சட்டம் மேலும் என்ன சொல்கி றது என்றால், தேசியப் புலனாய்வு ஏஜன்சி மூலம் புலனாய்வு,  மேற்கொள் ளப்படுமானால், அதில் பணியாற்றும் காவல் ஆய்வாளருக்குக் கீழ் நிலை யில் உள்ள அதிகாரி கூட புலனாய்வு மேற்கொள்பவராக இருக்க முடியும் என்று கூறுகிறது. 

♦அதே சமயத்தில் இந்த அரசாங்கம் சில தீவிரவாத இயக்கங்களிடம் மிகவும் மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற இதழாளரும் மனித உரிமை ஆர்வலருமான கௌரி லங்கேஷ் மற்றும் முற்போக்கு கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி ஆகியோர் சனாதன் சன்ஸ்தா என்று அழைக்கப்படும் அமைப்பி னால் ஒரேவிதமான துப்பாக்கியைப் பயன்படுத்தி, சுட்டுக் கொல்லப்பட்டார் கள். இந்த அமைப்பை அரசாங்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஏன் பட்டியலிடவில்லை?

♦தாத்ரியில் முகமது அக்லாக் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு என்ன நடந்தது? அவர் இந்த அரசாங்கத்தால் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

♦இதுதான் இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை. எனவேதான் இந்தச் சட்டத்தை நீங்கள் கொண்டுவருகிற போது நாட்டு மக்கள் அஞ்சுகிறார்கள்.

♦வருங்காலங்களில், நாடாளு மன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகிற பேச்சுக்காகக்கூட அவரைப் பயங்கரவாதி என அறி வித்திடக்கூடிய விதத்தில் அரச மைப்புச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவீர்களோ என்று நான் வலுவாக உணர்கிறேன். உங்களுக்கு எதிராக எவர் கருத்துக்கூறினாலும் நீங்கள் அஞ்சுகிறீர்கள்.

♦எதிர்க்கட்சியினர் உங்களுக்கு எதிராகப் பேசுவதை நீங்கள் விரும்பவில்லை. உங்களை நாங்கள் எதிர்ப்பதால் நீங்கள் எங்களை பயங்கரவாதிகள் என்றோ தேச விரோதிகள் என்றோ அழைத்திடலாம். ஆளும்கட்சித் தரப்பில் அமர்ந்திருக்கும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

♦உங்கள் எண்ணிக்கையைக் கண்டு நாங்கள் பயந்துவிடவில்லை. உங்கள் புஜபலத்தைக் கண்டு நாங்கள் பயந்துவிடவில்லை. உங்கள் பண பலத்தைக் கண்டு நாங்கள் பயந்துவிட வில்லை. இந்த நாட்டில் தனியொரு கம்யூனிஸ்ட்டாக நான் விடப்படும் நிலை ஏற்பட்டாலும்கூட நான் இந்தக் கொடுங்கோன்மை சட்டத்தை எதிர்ப்பேன். இந்த நாட்டு மக்கள் இதற் கெதிராக ஒன்றிணைந்து இக்கொடுங் கோன்மைச் சட்டத்தை எதிர்ப்பார்கள்.

மாநிலங்களவையில் சிபிஎம் உறுப்பினர் எளமரம் கரீம் பேசியதிலிருந்து...