tamilnadu

img

மோடியின் தியானம் செய்தது குகையா.. சொகுசு அறையா..?

புதுதில்லி:

கேதார்நாத்தில் பிரதமர் மோடி 17 மணிநேரம் தியானம் செய்ததாக கூறப்பட்ட ‘ருத்ரா குகை’ குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மோடி தியானம் செய்த குகை,‘கர்வால் மண்டல் விகாஸ் நிகாம்’ என்ற அமைப்பு மூலம் உருவாக்கப் பட்ட சொகுசு குகையாம். இவற்றில் தங்கி, தியானம் செய்வதற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்று கூறப்படுகிறது. ஆனால், இவ்வளவு தொகையை கொடுத்து தியானம் செய்வதற்கு ஆள் வராததால்,அண்மையில் வாடகையை 990 ரூபாய் என்று குறைத்திருக்கிறார்களாம்.


குகையில் மெத்தை, போர்வை,குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள், போன், போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும். மூன்று வேளை உணவும் இரண்டு வேளை தேநீரும் குகைக்கே வந்துவிடும். எந்த நேரத்தில் அவற்றை பெற வேண்டும் என்பதை தியானம் செய்பவரே முடிவு செய்து கொள்ளலாம். ஏதாவது உதவி தேவைப்பட்டால், ஆட்களை அழைக்க குகையில் ஒரு பெல் உள்ளது. அந்த பெல்அடித்ததும் ஓடிவந்து உதவ 24 மணிநேரமும் உதவியாளர்கள் அருகில் இருப்பார்கள். 


இப்படியொரு ஆடம்பரமான ‘ருத்ரா’ குகையை அமைக்க ஐடியா கொடுத்தவரே மோடிதான் என்று, கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் அமைப்பினர் கூறியுள்ளனர். மேலும், தற்போது மோடியே அந்த குகையில் வந்து தங்கியதால், இனிமேல் தங்களின் குகைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரிக்கும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கண்ணுறக்கம் இல்லாமல், சொட்டுத் தண்ணீர் பல்லில் படாமல், உணவைப் பற்றிய எண்ணம் இல்லாமல் தன்னை வருத்திக் கொண்டு, இறைவனை நினைத்து உருகுவதுதான் தியானம் என்று சொல்வார்கள். அவ்வாறு தியானம் செய்பவர்கள், வெயில், மழை, குளிர் என்று எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால், பிரதமர் மோடியும், அவரது வகையறாக்களும் தியானத்தையே ஆரம்பரமாகவும், குகையையே சொகுசுஅறையாகவும் மாற்றியிருக்கிறார்கள்.