tamilnadu

img

மத்திய அரசுக்கு மெகபூபா மகள் கடிதம்

கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர்?

புதுதில்லி, செப். 21- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, குறிப்பாக இளம் பெண்கள், அடைப்புக்காவலில் வைக்கப் பட்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று கேட்டு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் சார்பாக அவரது மகள் இல்திஜா மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கத் திற்கும் கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக இல்திஜா, ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து செயல்படாமலிருந்த தன் தாயாரின் ட்விட்டர் பக்கத்தை மீண்டும் செயல்படுத்தி வைத்தார். அப்பக்கத்தில், இப்போதி லிருந்து எனது தாயாரின் ட்விட்டர் வலைப்பக்கம் அவரிடமி ருந்து உரிய அதிகாரத்தைப் பெற்று என்னால் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். “காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித தகவல் தொடர்பு சேவையும் கிடைக்கவில்லை. ஏன், தினசரி செய்தித் தாள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. இவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்” என்றும் இல்திஜா பதிவிட்டுள்ளார்.  (ந.நி.)