திருவனந்தபுரம்:
கேரள அரசின் முன்னாள் ஐ.டி.செயலாளர் எம்.சிவசங்கர் தங்கக் கடத்தல் வழக்கில்எதிர்பார்த்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். வஞ்சியூரில் உள்ள திரிவேணி ஆயுர்வேத மருத்துவமனையில் இருந்து அவரைஅதிகாரிகள் கைது செய்தனர். புதனன்று காலை 10.45 மணிக்கு அவரை காவலில் எடுத்து கொச்சிக்கு கொண்டு சென்றனர்.
அமலாக்க இயக்குநரகம் மற்றும் சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிவசங்கரின் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டது, மேலும் அவர் கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்தனர். முன்னதாக சிவசங்கரின் ஜாமீன் மனுவை அமலாக்கத்துறையும் சுங்கத்துறையும் எதிர்த்தன. சிவசங்கர் தங்கக் கடத்தல் சதியில் ஈடுபட்டதாகவும், சொப்னா வெறும் கருவி என்றும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியது.வங்கி லாக்கரில் உள்ளது கள்ளக்கடத்தல் மூலம் கிடைத்த ஆதாயமாகும். இந்தகடத்தல் பொருளாதாரத்தை பாதிக்கும்செயலாகும். இதில் சமரசம் செய்துகொள்ளமுடியாது. சிவசங்கரின் பங்கை தெளிவாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். சொப்னாசிவசங்கரின் கட்டுப்பாட்டில் இருந்தார்.சிவசங்கர் ஒரு மூத்த குடிமைப்பணியாளர். முன்ஜாமீன் வழங்குவது விசாரணை யை கணிசமாக பாதிக்கும். ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், கள்ளக் கடத்தலுக்கு முதல்வர் அலுவலகத்தின் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தப்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.