tamilnadu

img

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஒய்ந்தது...

யின் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றியும் முற்றிலும் அவதூறான செய்திகளை தினந்தோறும் வெளியிட்ட வண்ணம் இருந்தன. இவை அனைத்தையும் மீறி மேற்குவங்கத்தில் இடதுமுன்னணியின் தலைவர்கள் எழுச்சிமிக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மறுபுறம் மேற்குவங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரசும், மத்தியில் ஆளும் பாஜகவும், இந்த முறை மேற்குவங்கத்தை தங்கள் வசமாக்கிட வேண்டும் என்ற வேட்கையுடன் முற்றிலும் வன்முறைப் பாதையில் இத்தேர்தலை எதிர்கொண்டன.  


இம்மாநிலத்தில் ஏழு கட்டங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த ஆறு கட்டங்களிலும் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கூட பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் வன்முறையை மட்டுமே கையில் ஏந்திக் கொண்டிருந்தன. இடதுமுன்னணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிந்த தொகுதிகளில் பாஜகவும், திரிணாமுல்லும் கைகோர்த்து இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறையை ஏவினர். இதுதவிர மாநிலம் முழுவதும் இருதரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டது போல தோற்றத்தை ஏற்படுத்தினர். பாஜக இந்துத்துவா மதவெறியையும், மம்தா கட்சி அதற்கு எதிரான மத அடிப்படைவாதத்தையும் ஒருவருக்கொருவர் ஊட்டி வளர்த்ததை இந்தத் தேர்தல் காலம் முழுவதிலும் வங்க மக்கள் பார்த்தனர்.


பிரகாஷ் காரத் பேட்டி

இத்தகைய வன்முறை அரசியலுக்கு இத்தேர்தலில் வங்க மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.


தேர்தல் பிரச்சாரக் களத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பிமன்பாசு, முகமது சலீம், திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், மேற்குவங்க மாநில செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் மேற்குவங்கத்தில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். பல இடங்களில் மம்தா கட்சி குண்டர்களின் வன்முறையை எதிர்கொண்டு இந்தப் பிரச்சாரம் எழுச்சியோடு நடைபெற்றதை சுட்டிக்காட்டியுள்ள பிரகாஷ் காரத், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தனது அட்டூழிய அராஜக அரசியலால் இந்துத்துவா சக்திகள் வளர்வதற்கு ஒரு களமாக வங்கத்தை மாற்றியிருக்கிறது. பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் முற்றிலும் மதவெறி அரசியலை முன்னிறுத்துகின்றன. இவர்கள் இருவரையும் மட்டுமே தேர்தல் களத்தில் முன்னிறுத்திய கார்ப்பரேட் ஊடகங்கள், திரிணாமுல் கட்சியின் கூலிப்படை வன்முறை அரசியலுக்கு மாற்றாக பாஜகவை முன்னிறுத்தின. இப்போது நினைவுகூர வேண்டியது என்னவென்றால், 1998-99 தேர்தலில் திரிணாமுல் உதவியுடன்தான் வங்கத்தில் முதல் முறையாக ஒரு இடத்தில் பாஜக வெற்றிபெற்றது. இப்போது இவர்கள் இருவரும் மதரீதியாக வங்க மக்களை பிளவுபடுத்தி முற்றாக வங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். 


இத்தகைய மதவெறி அரசியலை வங்க மக்கள் உறுதியாக முறியடிப்பார்கள் என நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.மேலும் 17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எந்தவிதத்திலும் பெரும்பான்மை பெற முடியாது எனக் குறிப்பிட்ட பிரகாஷ் காரத், பாஜக அல்லாத ஒரு மதச்சார்பற்ற ஒரு மாற்று அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், தேர்தல் முடிவுக்குப் பிறகு எழுகிற புதிய சூழலில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட்டு ஒரு மாற்று மதச்சார்பற்ற கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முன்வர வேண்டும் எனவும் கூறினார். அத்தகைய மக்களவையில் இடது சாரிகளின் இருப்பு பலப்படுமானால் மக்கள் நலக் கொள்கைகள் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.


மோடி பேட்டி

இதனிடையே, ஐந்தாண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் நரேந்திர மோடி, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, தமது ஆட்சியின் இறுதித் தருணத்தில், வெள்ளியன்று மாலை தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பாஜக தலைவர் அமித்ஷாவுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014ம் ஆண்டில் பெற்ற வெற்றியைவிட அபாரமான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று தமது நப்பாசையை வெளிப்படுத்தினார். ஆனால் செய்தி யாளர்களின் கேள்விகள் அனைத்துக்கும் அமித்ஷாவே பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.