tamilnadu

img

மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியால் ஏழை-எளிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் அக்டோபர் 16 புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, கவிதா கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் ஜி.ராமகிருஷ்ணன், பாளையங்கோட்டையில் கே.பாலகிருஷ்ணன், சேலத்தில் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;