திருவனந்தபுரம்:
கேரளத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக செப்டம்பர் வரை ரூ.8506 கோடி நிலுவையாக உள்ளது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் திங்களன்று அறிவித்தபடி ரூ.915 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு விநியோகத்திற்காக வசூலிக்கப்பட்ட செஸ் நிதியில் இருந்து மத்தியநிதிக்கு மாற்றப்பட்ட ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு நிலுவையில் இருந்தது. இதைத்தான் திங்கள்கிழமை இரவு மாநிலங்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான ஜி.எஸ்.டி (ஐ.ஜி.எஸ்.டி) யிலிருந்து ரூ.24,000 கோடி மத்தியநிதியில் உள்ளது. இதில் ரூ.843 கோடி கேரளத்துக்கானது. இந்த தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் திங்களன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தார். எப்போது கிடைக்கும் என்பதை குறிப்பிடவில்லை.
இழப்பீடு என்றாலும் கடன் பெறுவது என்றாலும் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் கேரளத்திற்கு உரிமை உண்டு. கோவிட் பின்னணியின் வருவாய் இடைவெளி மற்றும் கூடுதல் பொறுப்புகளால் இந்த தொகை மாநிலத்திற்கு அவசியமாகும். 12 ஆம் தேதி கூடும்ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகளின் அடிப்படையில் இதில் தீர்வு ஏற்படும்.மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு சதவிகிதம் கூடுதல் கடனில் அரை சதவிகிதம் மட்டுமே நிபந்தனையற்றது. இதை ஒருசதவிகிதமாக உயர்த்தலாம் என்று திங்களன்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் மத்தியஅரசு ஒப்புக் கொண்டது. ஜிஎஸ்டி இழப்பீடாகமாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2.3லட்சம் கோடியில் ரூ.1.1 லட்சம் கோடியை கடன் வாங்க மாநிலங்கள் தயாராக இருந்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இழப்பீட்டில் பாதி பிறகுதான் கிடைக்கும். பாதிக்கு மாநிலங்கள் கடன் வாங்க வேண்டும். இதற்கு ஒப்புதல் பெற சில பிரச்சனைகளில் தீர்வு காணப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.