tamilnadu

img

கேரள நிலச்சரிவு... பலியானோர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு... 

மூணாறு
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை எஸ்டேட் பெட்டிமடா பகுதி  குடியிருப்பில் வெள்ளியன்று நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 80-க்கும் மேற்பட்டோர் அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நேற்று வரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டன.இதில் 30-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இன்று இதுவரை மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.  

;