tamilnadu

img

மத்தியப்பிரதேச அரசியல் நெருக்கடி பாஜகவில் கரைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா

கைமேல் பலனாக மத்திய அமைச்சர் பதவி?

புதுதில்லி,மார்ச் 11- மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, பாஜகவின் ஆள்பிடி வேலையில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா புதனன்று பாஜக வில் இணைந்தார்.  காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மிகவும் வெட்கங்கெட்ட முறையில் பாஜக மேற்கொண்டுள்ள குதிரை பேரத்திற்கு ஜோதிராதித்யா சிந்தியாவும் இவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்களும்  சந்தர்ப்பவாதபேர்வழிகளாக மாறி விலை போயினர். செவ்வாயன்று இவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  இந்த நடவடிக்கை மத்தியப்பிரதேச அரசியலில் நெருக்கடியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் பாஜக தலைமையகத்திற்கு வந்த சிந்தியாவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பூங்கொடுத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார்.  பின்னர் ஜோதிராதித்யா சிந்தியா பாஜக வில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததை குறிக்கும் வகையிலான உறுப்பினர் படி வத்தை அவரிடம் ஜே.பி.நட்டா வழங்கினார். தம்மை பாஜகவில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஜோதி ராதித்யா சிந்தியா நன்றி தெரிவித்து,தனது விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக கைமேல் பலனாக ஜோதிராதித்யா சிந்தியா மாநிலங்களவை எம்.பி. யாகி, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

தில்லிக்குச் சென்ற பாஜக எம்எல்ஏக்கள்

பாஜக எம்.எல்.ஏ.க்கள் 107 பேரின் சந்திப்பு செவ்வாயன்று மாலை போபாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்ததும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 5 சொகுசு பேருந்துகளில் போபால் விமானநிலை யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்கள்  ஆடிப்பாடி கொண்டாடி னர். தாங்கள் தில்லி அழைத்துச் செல்லப்படுவ தாக பாஜக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். தில்லி புறநகர் பகுதியான ஹரியானா வின் குர்கான் நகரில் உள்ள  ஐ.டி.சி. நட்சத்திர ஓட்டலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 101 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானுக்குச் சென்ற காங்.எம்எல்ஏக்கள்

இந்நிலையில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் 88 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் 4 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கமல்நாத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக எழுதிக் கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கமல்நாத் பேசுகையில், தனது ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் பெரும்பான்மை யை நிரூபித்து 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வோம் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக் கள்  ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஜெய்ப்பூரில் அவர்கள் நட்சத்திர ஓட்டலில் ‘தங்க’ வைக்கப் பட்டுள்ளனர்.