ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர். ஜம்முவிலும் லேசான நடுக்கம் உணரப்பட்டது.
நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.