ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப் பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிக வும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புரா தன பட்டியலில் இணைத்து வரு கிறது. அந்த வகையில் இந்த ஆண் டுக்கான பட்டியல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் மாநிலத் தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புரா தன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டி யலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப் பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தி யாவில் இருந்து தேர்வு செய்யப் பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெற்றது குறிப்பிடத்தக்கது.