tamilnadu

img

மாஸ்கோவில் இஸ்ரோ தொழில் நுட்ப மையம்

புதுதில்லி:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்கவும், பொலிவியா நாட்டுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் பொரு ளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள் ளது என்றார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக ரூ.22,875 கோடி ஒதுக்கவும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ள தாகவும் கூறியுள்ளார்.

;