tamilnadu

img

தில்லி வன்முறை குறித்து ஈரான் மீண்டும் கருத்து இந்தியா உலகளவில் தனித்துவிடப்படலாம்!

புதுதில்லி, மார்ச் 6 - தில்லி சம்பவமானது, இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக திட்ட மிடப்பட்ட வன்முறை என்று ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜவாத் ஷரீப் அண்மையில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். “அனைத்து இந்தியர் களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த, புத்தியில்லாத குண்டர்களை மேலோங்க விட வேண்டாம்” என்று இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.  ஈரான் அமைச்சரின் இந்த கருத்து க்கு கண்டனம் தெரிவித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது. இந்நிலையில், ஈரான் நாட்டின் உயர் அதிகாரம் கொண்ட மதத் தலை வரும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு  விவகாரங்களை கவனித்து வருபவரு மான அயத்துல்லா கோமேனியும், தில்லி வன்முறை குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “இந்தியாவில் முஸ்லிம்கள் படு கொலை செய்யப்படுவதைக் கண்டு உலக முஸ்லிம்களின் நெஞ்சம் கவலை கொள்கிறது. இந்திய அரசு இந்துத்வா தீவிரவாதிகள் மீதும், அவர்களது கட்சி கள் மீதும் நடவடிக்கை எடுத்து, இந்திய முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படு வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். உலக நாடுகளிடமிருந்தும், உலக இஸ்லா மியர்களிடம் இருந்தும் இந்தியா தனித்து விடப்படுவதை தவிர்க்கும் வகை யில் உடனடியாக இந்த நடவடிக்கை யை எடுக்க வேண்டும்” என்று அய த்துல்லா கோமேனி அந்த பதிவில் குறிப் பிட்டுள்ளார்.