tamilnadu

img

ப.சிதம்பரத்திடம் விசாரணை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு

புதுதில்லி:
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலைஅக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தர விட்டது. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தில்லி சிறப்புநீதிமன்றத்தில் வெள்ளியன்று மனு தாக்கல் செய்தது.  இந்தமனுவை விசாரித்த நீதிபதி,அக்டோபர் 14 ஆம் தேதிப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

;