tamilnadu

img

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு முதல் மருத்துவர் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 6222 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
205 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213ஆக உள்ளது.
கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.