இயற்கை பேரிடர் பாதிப்பில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது என ஐநா வெயிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டு வரையில் உலக நாடுகள் சந்தித்துள்ள இயற்கை பேரழிவு அபாய குறைப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் சீனா 577 பேரிடர்களையும் அமெரிக்கா 467 பேரிடர்களையும் இந்தியா 321 பேரிடர்களையும், பிலிப்பைன்ஸ் 304 பேரிடர்களையும் இந்தோனேஷியா 278 பேரிடர்களையும் சந்தித்துள்ளன. இதில் 10 நாடுகளில் 8 நாடுகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை ஆகும். ஆசியநாடுகள் 3068 பேரிடர்களையும் வட தென் அமெரிக்கா கண்டங்கள் 1756 நிகழ்வுகளையும் ஆப்பிரிக்கா 1192 நிகழ்வுகளையும் சந்தித்துள்ளன.
இதுகுறித்து பெல்ஜியம் பல்கலைக்கழக பேராசிரியர் தேபராத்தி குகா, கூறியதாவதும்
இந்த பேரிடரில் கொரோனா போன்ற உயிரியல் சார்ந்த இடர்களை கணக்கில் கொள்ளவில்லை. பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ள தவறியதும், பசுமைக்கூட வாயுக்கள் அதிகமாக உற்பத்தி செய்வதுமே மனித குலத்தின் இத்தகைய துன்பத்துக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
இது அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நீடித்தால் மனித குலத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.