tamilnadu

img

கூட்டு ராணுவ பயிற்சியை  புறக்கணிக்க இந்தியா முடிவு

புதுதில்லி:
ரஷ்ய நாட்டில் அடுத்த மாதம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.

ரஷியாவின் அஸ்ட்ராகான் நகரில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. அதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கஇந்தியா முடிவு செய்திருந்தது.  இந்த நிலையில், இந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அடுத்தடுத்த தொடர்ச்சியான கடின சூழலால்  பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;