tamilnadu

img

இந்தியா: கொரோனா பலி எண்ணிக்கை 48040 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  48040 ஆக உயர்ந்துள்ளது. 
நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  இன்று  கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளியன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 64,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  24 லட்சத்து 61 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48040 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய சூழலில் 661595 பேர் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். 17,51,5565 பேர் குணமடைந்துள்ளனர்  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.