tamilnadu

img

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு....

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து நிகர மதிப்பு 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண் டில் ரூ .36 லட்சம் அதிகரித்துள்ளது என்பதை பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) சமர்ப்பித்த சொத்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் சமீபத்திய சொத்து அறிக்கையின் படி நிகர சொத்துமதிப்பு 2020 ஜூன் 30 நிலவரப்படி ரூ.2.85 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ.2.49 கோடியாக இருந்தது. சுமார் ரூ.3.3 லட்சம் வங்கி வைப்பு மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வருமானம் காரணமாக பிரதமர் மோடியின் சொத்து அதிகரித் துள்ளன.பிரதமர் மோடியின் கையில் ரூ.31,450 ரொக்கமாகவும், வங்கி இருப்புரூ.3,38,173 ஆகவும், எஸ்பிஐ காந்திநகர் என்எஸ்சி கிளையில் வங்கி நிரந்தர வைப்பு மற்றும் எம்ஓடி இருப்பு ரூ,60,28,939 ரூபாயும் இருந் தது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.பிரதமருக்கு ரூ.8,43,124 மதிப் புள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி), ரூ.1,50,957 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வரி சேமிப்பு இன்ஃப்ராபத்திரங்கள் உள்ளன. பிரதமர் மோடிஅறிவித்த அசையும் சொத்துக்கள் சுமார் ரூ1.75 கோடி ரூபாய் ஆகும்.13.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 அசையா சொத்துக்களை அமித்ஷா வைத்துள்ளார். மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷாவின் நிகரமதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.