tamilnadu

img

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின்  எண்ணிக்கை 3,867 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை  தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரம்- குடும்பநல அமைச்சகம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில்கொரோனா வைரஸ்பாதிப்புக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 3,867 பேராக அதிகரித்துள்ளது.   54 ஆயிரத்து 441 பேர் குணமடைந்துள்ளனர். 73 ஆயிரத்து 560 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 பேராக அதிகரித்துள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

;