tamilnadu

img

சில்லரை வர்த்தகத் துறையில் 40% பேர் வேலையிழக்கும் ஆபத்து....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பால் சில்லரை விற்பனைத் துறையில் வருவாய்இழப்புகள் அதிகரித்துள்ளதோடு, இத்துறையில் பலலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக, இந்திய சில்லரை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (RAI) தலைமைச் செயல் அதிகாரியான குமார் ராஜகோபாலன் கூறியிருப்பதாவது:

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, வி-மார்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப்,ஃபியூச்சர் குரூப், அவெனியூசூப்பர் மார்ட் உள்ளிட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய சில்லரை வர்த்தகத் துறையில் மொத்தம்60 லட்சம் பேர் பணியாற்றிவரும் நிலையில், அரசாங்கம் தலையிடாவிட்டால்- அரசுதரப்பிலிருந்து இத்துறையினருக்கு இழப்பீடு எதுவும் வழங்காவிட்டால், அடுத்த ஒன்பது மாதங்களில் 90 சதவிகிதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும். 4 மாதங்களில் 40 சதவிகிதம் பேர் வேலையிழப்பார்கள்.எனவே, மத்திய அரசுஇதில் தலையிட்டு வேலையிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, கொரோனா பாதிப்புகளைக் கட்டுப் படுத்துவது மிக முக்கியமானதாகும் என்று ராஜகோபாலன் கூறியுள்ளார்.

;